For Daily Alerts
Just In
சங்கரராமன் கொலை வழக்கு: மேலும் 2 பேருக்கு ஜாமீன்
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் மேலும் 2 பேருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 5 பேர் ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர். மற்றவர்களில் 18 பேர் சென்னை சிறையிலும்,அப்பு கடலூர் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மேலும் 2 பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன்அளித்துள்ளது.
போலிக் குற்றவாளியான தேவராஜ், போலிக் குற்றவாளிகளுக்கு பணப் பட்டுவாடா செய்த வில்லிவாக்கம் சேகர் ஆகியோர்தங்களை ஜாமீனில் விடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர்.
இவர்களது மனுக்களை விசாரித்த நீதிபதி தணிகாச்சலம் இன்று அவர்களை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யஉத்தரவிட்டார். அதன்படி இருவரும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.
Comments
Story first published: Sunday, May 29, 2005, 5:30 [IST]