இந்தியாவில் 2,000 கோடி முதலீடு: ஜப்பான்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இந்தியாவுடன் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 2,000 கோடி முதலீடு செய்யப்படும் என்று ஜப்பான் பிரதமர் ஜூனிசிரோ கொய்சுமிதெரிவித்துள்ளார்.

ஜப்பானிய பிரதமர் ஜூனிசிரோ கொய்சுமி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று இந்தியா வந்தார். அவருக்கு டெல்லி விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதன் பிறகு இவர், குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை சந்தித்து பேசினார். அப்போது வர்த்தகம் மற்றும் விஞ்ஞான தொழில்நுட்பம், கலாச்சாரம் ஆகியவற்றில் ஒத்துழைப்பு அளிப்பது மற்றும் இரு தரப்பு உறவுகள் ஆகியவை குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இரு தரப்பிலும் நல்ல உறவு நீடித்த போதிலும் அதற்கு தகுந்தாற் போல போதிய அளவு வர்த்தகம் வளர்ச்சி அடையவில்லை என்றுஇருவரும் ஒப்புக் கொண்டனர். ஆனால் தற்போதைய 400 கோடி முதலீடு அடுத்த 5 ஆண்டுகளில் 2,000 கோடியாக உயரும்என்று கொய்சுமி நம்பிக்கை தெரிவித்தார்.

இதன் பிறகு ஜப்பான் பிரதமர் கொய்சுமி, மன்மோகன் சிங்கையும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது ரசாயன உரம்மற்றும் ஆட்டோ மொபைல் தொழிற்சாலைகள் அமைக்க உதவியதற்கு மன்மோகன் சிங் நன்றி தெரிவித்தார்.

மன்மோகன் சிங்கை ஜப்பானுக்கு வருமாறு கொய்சுமி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை மன்மோகன் சிங் ஏற்றுள்ளார்.

இதன் பிறகு ஜப்பானிய பிரதமர் கொய்சுகி, பாகிஸ்தான் புறப்பட்டு சென்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+