டெல்லி தமிழ் சங்கத்தில் தீ விபத்து: பரவை முனியம்மா உயிர் தப்பினார்
டெல்லி:
டெல்லி தமிழ்ச் சங்கத்தில் நடிகர், நடிகைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்த போது திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில்பரவை முனியம்மா, குமரி முத்து உட்பட 2 ஆயிரம் பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
நேற்று மாலை 4 மணியளவில் கலை நிகழ்சிகள் தொடங்கின. இதைப் பார்ப்பதற்கு அரங்கத்தில் சுமார் 2,000 பேர் கூடியிருந்தனர்.முதலில் ஒரு நிகழ்ச்சி முடிந்ததும், இரண்டாவதாக நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அங்கிருந்த மின்சாரபோர்டில் தீப்பிடித்தது.
இதைக் கண்டதும் நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தத பார்வையாளர்கள் அனைவரும் அலறியபடியே அங்கிருந்து ஓடினார்கள்.நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த பரவை முனியம்மா மற்றும் குமரி முத்து உட்பட அனைத்து கலைஞர்களும் உடனடியாகஅங்கிருந்து வெளியேறினர்.
தீ விபத்து குறித்து அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீ மேலும் பரவவிடாமல் அணைத்தனர்.
மின் கோளாறே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த தீ விபத்தால் கலை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications