போலீஸ் பாதுகாப்பை நீட்டிக்க கோருகிறார் ஜெயலட்சுமி
மதுரை:
உயிருக்கு ஆபத்து இருப்பதால் போலீஸ் பாதுகாப்பை நீட்டிக்கக் கோரி மதுரை நீதிமன்றத்தில் ஜெயலட்சுமி மனு தாக்கல்செய்துள்ளார்.
சிவகாசி ஜெயலட்சுமிக்கு, மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவுப்படி போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. 21போலீஸார் அவரது பாதுகாப்புப் பணியில் ஷிப்ட் அடிப்படையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த போலீஸ் பாதுகாப்பு வருகிற 6ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அதன் பிறகு போலீஸ் பாதுகாப்பு அளிப்பதில்லை என்றுமதுரை எஸ்.எஸ்.காலனி காவல் நிலையம் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து ஜெயலட்சுமியின் வழக்கறிஞர் கேசவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், உயிருக்கு ஆபத்து இருப்பதால் போலீஸ்பாதுகாப்பை நீட்டிக்க வேண்டும் என்றுஜெயலட்சுமி தனது மனுவில் கூறியுள்ளார்.
அவரது மனுவைப் பரிசீலித்த நீதிபதி அய்யாசாமி, வருகிற 10ம் தேதி ஜெயலட்சுமி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். அதுவரைஅவருக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் என்றார்.
சிபிஐ விசாரணையில் மோசடி செய்தது ஜெயலட்சுமி தான் என்றும், போலீசார் மீது இவர் சொன்ன புகார்களில் பல தவறானவைஎன்றும் தெரியவந்துள்ளது.
ஆனால், தன் மீது பாலியல் அத்துமீறல்கள் செய்த போலீசார் மீது சிபிஐ சரியாக விசாரிக்கவில்லை என ஜெயலட்சுமி கூறிவருகிறார்.
இதற்கிடையே, ஜெயலட்சுமியுடன் கள்ள உறவு வைத்திருந்த போலீசார் குறித்த தங்களது விசாரணை அறிக்கையை சிபிஐ தமிழகஅரசிடம் வழங்கி, நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப் போவதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications