வேட்பு மனு நிராகரிப்பை எதிர்த்து சுயேச்சை வழக்கு
சென்னை:
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட, தான் தாக்கல் செய்திருந்த வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து சுயேச்சைவேட்பாளர் கந்தசாமி சிங் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை அருகே உள்ள மறைமலை நகர் (காஞ்சிபுரம் மாவட்டம்) பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி சிங். இவர் ஒரு வழக்கறிஞர்.காஞ்சிபுரம் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட இவர் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.
வாக்குரிமை உள்ள ஆவணம் உள்ளிட்ட சில ஆவணங்களை, உயர்நீதிமன்றத்தில் உள்ள எனது அறையிலிருந்து எடுத்துக் கொண்டு 26ம்தேதி காலை 9.45 மணிக்கு சென்னை கோயம்பேட்டிலிருந்து காஞ்சிபுரம் கிளம்பினேன். காஞ்சிபுரம் சென்று தேர்தல் அதிகாரி முன்பு பகல்12.45 மணிக்கு ஆஜரானேன். எனது ஆவணங்களை அவரிடம் கொடுத்தேன்.
ஆனால் 12 மணிக்கே பரிசீலனை முடிந்து விட்டதாக கூறி எனது மனுவைத் தள்ளுபடி செய்து விட்டதாக தேர்தல் அதிகாரி கூறினார். இதுசட்ட விரோதமானதாகும். மாலை 3 மணி வரை மனுவை பரிசீலனை செய்யாமல் 12 மணிக்கே அதை முடித்து விட்டது சட்டவிரோதமானசெயல்.
எனவே எனது மனு தள்ளுபடி செய்யப்பட்டதை ரத்து செய்து என்னைப் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் சிங்.மனுவை பரிசீலித்த நீதிபதி குலசேகரன், விசாரணைக்கு ஏற்றார். விளக்கம் அளிக்குமாறு கூறி சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ்அனுப்பவும் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications