பெங்களூர்: போலீஸ் எண்கெளன்டரில் சோட்டா ராஜன் கூட்டாளிகள் 2 சாவு
பெங்களூர்:
பெங்களூரில் அடுத்தடுத்து மும்பை தாதா கும்பலைச் சேர்ந்த இரு ரெளடிகளை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர்.
சோட்டா ராஜன் கும்பலைச் சேர்ந்த அப்துல் ரசாக் என்பவனை நேற்றிரவு போலீசார் எண்கெளன்டரில் சுட்டுக் கொன்றனர்.
பெங்களூர் பன்னரகட்டா சாலையில் பெரிய அளவில் நிலம் வைத்திருக்கும் சம்பத் என்பவரை ரசாக் மிரட்டி அந்த நிலத்தை தங்களிடம்கொடுத்துவிடுமாறு கூறினான். இல்லாவிட்டால் உன்னைக் கொல்வோம் என சம்பத்தை சோட்டா ராஜன் கும்பல் மிரட்டியது.
இதையடுத்து போலீசாரின் உதவியை நாடினார் சம்பத். பின்னர் தொலைபேசியில் பேசிய ரசாக், சம்பத்தை ஒசூர் ரோட்டில் உள்ள செயிண்ட்பேட்ரிக் கல்லறைக்கு வரச் சொன்னான். சொன்னபடியே சம்பத் அங்கு நேற்று நள்ளிரவில் சென்றார். சம்பத்துக்கு முன்பே அங்கு போலீசார்சென்று பதுங்கிக் கொண்டனர்.
இந் நிலையில் சோட்டா ராஜனின் கும்பலைச் சேர்ந்த நஸ்ரு என்பனை ஆனேகல் பகுதியில் இன்று போலீசார் அவனது வீட்டில் சுற்றிவளைத்தனர். ஆனால், அப்போது வாளால் போலீசாரை நஸ்ரு தாக்க முயன்றான். இதையடுத்து அவனையும் போலீசார் சுட்டுக் கொன்றர்.
நஸ்ரு தாக்கியதில் 4 போலீசார் காயமடைந்தனர். இதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நஸ்ருவுடன் இருந்த அவனது கூட்டாளிகள் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.