தமிழக காங்கிரஸ் தேர்தல்: மகா குழப்பம்
சென்னை:
காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் கட்சி தேர்தல், கட்சியை மேம்படுத்துவது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்அம்பிகா சோனி ஆலோசனை நடத்தினார்.
தமிழக காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், ஒவ்வொரு கோஷ்டியும் ஆயிரக்கணக்கில் போலி உறுப்பினர்களைசேர்த்து வைத்துள்ளன. இதனால் தேர்தல் முறையாக நடக்காத நிலை உள்ளது.
இந்த கோட்டா முறைக்கு வாசன்-இளங்கோவன் தவிர்த்து பிற தலைவர்களிடம் அமோக ஆதரவு உள்ளது. ஆனால், இந்த இருவர் மட்டுமேதேர்தல் நடத்தலாம் என்கின்றனர்.
ஆனால், தேர்தல் நடத்தினால் அதிருப்தியாளர்கள் கொண்ட மேலும் பல கோஷ்டிகள் உருவாகும் என்பதால் கோட்டா திட்டத்தையேஅமலாக்கிவிடலாமா என மத்தியத் தலைமை யோசித்து வருகிறது.
இந் நிலையில், கோட்டா முறைப்படி தனக்கு 70 சதவீத பதவிகளை ஒதுக்க வேண்டும் என வாசன் குண்டு போட்டுள்ளார். மிச்சமுள்ள 30சதவீத பதவிகளை இளங்கோவன், ப.சிதம்பரம், அன்பரசு, தங்கபாலு, ஜெயந்தி நடராஜன், மணிசங்கர அய்யர், பீட்டர் அல்போன்ஸ்உள்ளிட்ட கோஷ்டியாளர்களுக்குத் தருமாறு கூறியுள்ளார்.
இதனால் மண்டை காயந்து போயுள்ள காங்கிரஸ் தலைமை, ஏதாவது சமரச பார்முலாவைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியின் ஒரு கட்டமாகஅகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் அம்பிகா சோனியை சென்னைக்கு அனுப்பியது.
இன்று காலை சத்தியமூர்த்தி பவனில் கட்சி நிர்வாகிகளை சந்தித்தார் சோனி.












Click it and Unblock the Notifications