For Daily Alerts
Just In
இந்திய விஞ்ஞானிகளுக்கு ஜப்பான் விசா மறுப்பு
டோக்கியோ:
1998ம் ஆண்டு இந்தியா அணுகுண்டு சோதனை நடத்திய பிறகு இதுவரை 11 மூத்த இந்திய விஞ்ஞானிகளுக்கு ஜப்பான் விசாவழங்க மறுத்துள்ளது.
கடந்த 1998ம் ஆண்டு பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியது அமெரிக்கா உட்பட பல உலக நாடுகளைஅதிர்ச்சியடைய வைத்தது. இதற்குப் பிறகு இந்தியா மீது அமெரிக்கா பல பொருளாதார தடைகளை விதித்தது.
அணுகுண்டு சோதனை நடத்தப்பட்ட 1998ம் ஆண்டு ஒரு விஞ்ஞானிக்கும், 2003ம் ஆண்டு 3 பேருக்கும்,2004ம் ஆண்டு 6பேருக்கும், இந்த ஆண்டு ஒருவருக்கும் மட்டுமே ஜப்பான் அரசு விசா வழங்க மறுத்துள்ளது.
விசா மறுக்கப்பட்ட 11 பேரில் 9 விஞ்ஞானிகள் ஜப்பானிலுள்ள அணு ஆராய்ச்சி மையத்திற்கும், 2 விஞ்ஞானிகள் அங்குள்ளபல்கலைக்கழகத்திற்கும் ஆராய்ச்சிக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.
ஆனால், இவர்களுக்கு ஜப்பான் அரசு விசா வழங்கவில்லை.
Comments
Story first published: Monday, May 9, 2005, 5:30 [IST]