For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமைச்சர்கள் நாளை மாலை 5 மணிக்குள் வெளியேற உத்தரவு!

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

இடைத் தேர்தல் நடைபெறவுள்ள காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் தங்கி பிரசாரம் செய்து வரும் மத்திய மற்றும்மாநில அமைச்சர்கள் நாளை (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்குள் தொகுதியை விட்டு வெளியேறி விட வேண்டும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபை இடைத் தேர்தல் பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. 14ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.இதையடுத்து வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் குறித்து இரு தொகுதிகளின் தேர்தல் அதிகாகரிள் செய்தியாளர்களுக்குவிளக்கினர்.

காஞ்சிபுரம் தொகுதி தேர்தல் அதிகாரி அன்பழகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், காஞ்சிபுரம் தொகுதியில் மொத்தம் 235வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. இங்கு 2,35,638 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

மொத்தம் 20 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதனால் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும், இரண்டு மின்னணு வாக்குப் பதிவுஇயந்திரம் வீதம் மொத்தம் 470 இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும்.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் ஏற்கனவே வந்து சேர்ந்து விட்டன. அவை பரிசோதித்துப் பார்க்கப்பட்டுவிட்டது. பாதுகாப்பாக அவை தற்போது வைக்கப்பட்டுள்ளன. 13ம் தேதி காலை பலத்த பாதுகாப்புடன் இந்த வாக்குப் பதிவுஇயந்திரங்கள் வாக்குச் சாவடிகளுக்குக் கொண்டு செல்லப்படும்.

14ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கும். மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். வாக்குப் பதிவுக்குப்பின்னர் வாலாஜாபாத் சாலையில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரிக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டுபாதுகாப்புடன் வைக்கப்படும்.

16ம் தேதி காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் உள்ளன.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் மிகவும் கடுமையாக கடைப்பிடிக்கப்படும். தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளபடி, வாக்குச்சாவடிகளுக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வேட்பாளர்களின் ஏஜென்டுகளாக பணியாற்ற முடியும். இதற்கானசான்றுகளை ஏஜென்டுகள் காட்ட வேண்டும்.

வாக்குப் பதிவு தினத்தன்று வன்முறையில் ஈடுபடுபவர்கள் சுட்டுத் தள்ளப்படுவார்கள். போலீஸாருடன், துணை ராணுவத்தினரும்தீவிர பாதுகாப்பில் ஈடுபடுவர்.

வாக்குப் பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பாகவே தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் தொகுதியிலிருந்து வெளியேறி விடவேண்டும். எனவே வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் மத்திய, மாநில அமைச்சர்கள், வெளியாட்கள் தொகுதியிலிருந்துவெளியேறி விட வேண்டும் என்றார் அன்பழகன்.

இதேபோல, கும்மிடிப்பூண்டியிலும் தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன. தொகுதியில் தங்கியிருக்கும்அமைச்சர்கள் வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் வெளியேற தொகுதி தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

வேட்பாளர்கள் முன்னிலையில் இரு தொகுதிகளின் வாக்குப் பதிவு இயந்திரங்களும் பரிசோதித்து பார்க்கப்பட்டன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X