காஞ்சி, கும்மிடிப்பூண்டி: மே 14ல் விடுமுறை அறிவிப்பு
சென்னை:
இடைத் தேர்தல் நடைபெறும் காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டியில் மே 14ம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறைவழங்கப்பட வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக நரேஷ் குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், இடைத் தேர்தல் நடைபெறும் இரு தொகுதிகளிலும் அனைத்துவாக்காளர்களுக்கும் வாக்களிப்பதற்கு வசதியாக, மே 14ம் தேதி பொது விடுமுறையாக அரசு அறிவித்துள்ளது. சட்டமன்றத்தொகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் இந்த அறிவிப்பு பொருந்தும்.
இந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு வெளியே உள்ள தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றில் வேலைபார்ப்போருக்கு, ஊதியத்துடன் கூடிய விடுப்பு தர அந்தந்த நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதை மீறி விடுப்பு தர மறுக்கும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நரேஷ் குப்தா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications