For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இனி பிரசச்ாரம் செய்தால் 2 ஆண்டு சிறை!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தேர்தல் பிரசாரத்துகான கால அவகாசம் முடிந்த பின்னர், மாலை 5 மணிக்கு மேல் விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்தால் 2ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் வகையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா எச்சரித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, தேர்தல் நடைபெறுவதற்கு 48 மணி நேரத்திற்குமுன்பிருந்தே, யாரும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது. அதாவது ஊர்வலம், பொது இடங்களில் கூட்டமாக பிரசாரம்செய்வது உள்ளிட்டவற்றை மேற்கொள்ளக் கூடாது.

மக்களைக் கவரும் வகையில் இசைக் கச்சேரிகள் நடத்துவது, ஒலிபெருக்கிகள் மூலமாக பிரசாரம் செய்வது, நாடகங்கள்நடத்துவது போன்றவையும் தடை செய்யப்படுகிறது.

சினிமா, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்கள் மூலமாகவும் பிரசாரம் செய்யக் கூடாது.

இந்த விதிமுறைகளை மீறி செயல்படுவோர் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 126, உட்பிரிவு 1ன் கீழ் 2 ஆண்டு வரை சிறைதண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தோ தண்டிக்கப்படுவார்கள்.

இந்தத் தடைகள் இன்று (12ம் தேதி) மாலை 5 மணி முதல் 14ம் தேதி மாலை 5 மணி வரை அமலில் இருக்கும் என்று கூறியுள்ளார்நரேஷ் குப்தா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X