For Daily Alerts
Just In
ஏர்-சஹாராவின் சிங்கப்பூர் சேவை தொடக்கம்
சிங்கப்பூர்:
ஏர்-சஹாரா நிறுவனத்தின் சர்வதேச விமான சேவை இன்று தொடங்கியது. அதன் முதல் சர்வதேச விமானம் இன்று காலைடெல்லியில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றது.
முதலில் இந்தியாவின் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சர்வதேச விமான சேவையில் இறங்கியது. நேபாள், இலங்கைக்கு ஏர் சஹாராவும்முன்பே விமானங்களை இயக்கி வந்தாலும் அதன் முக்கிய சேவையான சிங்கப்பூர் விமான சேவை இன்று தான்தொடங்கப்பட்டுள்ளது.
மும்பையில் இருந்து சிங்கப்பூருக்கு வாரம் 14 விமானங்களை ஜெட் ஏர்வேஸ் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் 6 விமான நிறுவனங்கள் இந்தியாவின் 11 நகர்களில் இருந்து சிங்கப்பூருக்கு வாரத்துக்கு 220 விமானங்களை இயக்கஆரம்பித்துள்ளன. 2002ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்தியா-சிங்கப்பூர் இடையிலான பயணிகள் போக்குவரத்து 21 சதவீதம்அதிகரித்துள்ளது.
Comments
Story first published: Thursday, May 12, 2005, 5:30 [IST]