For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலீஸ் சுட்டு 5 தெலுங்கு தேசம் தொண்டர்கள் பலி

By Staff
Google Oneindia Tamil News

ஐதராபாத்:

ஆந்திராவில் இடைத்தேர்தல் வேட்பு மனுதாக்கலின் போது பயங்கர கலவரம் வெடித்தது. இதில் போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்கள் பலியானார்கள்.

ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்திலுள்ள பெனுகொண்டா தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூன் 2ம் தேதி நடைபெறுகிறது. இந்ததொகுதியில் தெலுங்கு தேச கட்சி வேட்பாளராக சுனிதா என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்காக இவர் தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்றார். அப்போதுஊர்வலத்தில் சென்றவர்கள் போலீஸ் மீது திடீரென கல் வீசினார்கள்.

போலீஸார் அவர்களை தடியடி நடத்தி விரட்டினார்கள். ஆனால் நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.இதில் 5 தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்கள் பலியானார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X