இரட்டை டம்ளர் முறை: புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
கோவை:
இரட்டை டம்ளர் முறை, கோவில்களில் தலித்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில்புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கோவை செஞ்சிலுவைச் சங்கம் எதிரே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழகத்தின் பல்வேறுகிராமங்களில் இன்னும் தீண்டாமைக் கொடுமை தலை விரித்தாடுகிறது. இரட்டை டம்ளர் முறை இன்னும் ஒழியவில்லை.
விரைவில் தீண்டாமைக் கொடுமை நடக்கும் கிராமங்களுக்கு சென்று போராடப் போகிறோம். தலித் சமுதாயத்தினருக்கு வேலைகொடுக்கக் கோரி கோவில்கள் முன்பும் போராட்டம் நடத்துவோம் என்றார் கிருஷ்ணசாமி.












Click it and Unblock the Notifications