நிருபர்களுக்கு இனிப்பு வழங்கிய ஜெயலலிதா
சென்னை:
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் மைதிலி திருநாவுக்கரசு மற்றும்கே.எஸ்.விஜயக்குமார் இருவரும் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெற்றனர்.
அதிமுக வெற்றியை தொடர்ந்து நிருபர்களை சந்தித்த ஜெயலலிதா நிருபர்களுக்கு அவரே இனிப்புகளை தட்டில் வைத்துவழங்கினார். அப்போது மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்ட ஜெயலலிதா, தனக்கு மிக ராசியான பச்சை நிற சேலைஅணிந்திருந்தார்.
இதற்கிடையே வெற்றி பெற்ற கே.எஸ்.விஜயகுமார் மற்றும் மைதிலி திருநாவுக்கரசு ஆகிய இருவரும் தங்களது தொகுதி தேர்தல்அதிகாரியிடம் அதற்கான சான்றிதழைப் பெற்றுக் கொண்டனர்.
அதன் பின்னர் இருவரும் சென்னை விரைந்தனர். போயஸ் கார்டன் இல்லத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த இருவரும்அவரிடம் சான்றிதழைக் காட்டி ஆசி பெற்றனர்.
வேட்பாளர்கள் இருவருடனும், தொகுதி தேர்தல் பணிக்குப் பொறுப்பாளர்களாக இருந்து அதிமுக தேர்தல் பணிகளை (பணபட்டுவாடா உள்ளிட்ட விஷயங்களை) கவனித்த அமைச்சர்கள் பொன்னையன், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் உடன்இருந்தனர்.












Click it and Unblock the Notifications