குமரி மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பு: ஊருக்குள் தண்ணீர் புகுந்தது!

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று மாலை கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதில் ஊருக்குள் தண்ணீர் புகுந்ததில் பல வீடுகள்இடிந்தன. இதனால் மீனவர்கள் பீதியடைந்து பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர்.

சுனாமி பாதிப்பிற்குப் பிறகு குமரி மாவட்டத்தில் பல இடங்களில் திடீர் திடீனெ கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு ஊருக்குள்தண்ணீர் புகுந்து விடுகிறது. இதனால் மீனவர்களிடையே இன்னும் சுனாமி பீதி மறையவில்லை.

இந் நிலையில் நித்திரவிளை அருகே இரயுமன்துறையில் நேற்று கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இங்கு தாமிரபரணி ஆறும்,கடலும் சந்திக்கும் பொழிமுகம் உள்ளது. நேற்று மாலை சுமார் 4 மணியளவில் இப்பகுதியில் திடீரென கடல் கொந்தளிப்புஏற்பட்டது.

கடலில் இருந்து 30 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் எழும்பி ஊருக்குள் சீறிப்பாய்ந்து வந்தன. ராட்சத அலைகளை பார்த்தமீனவ மக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். ஊருக்குள் புகுந்த கடல் நீர் மறுபக்கம் ஓடும் தாமிரபரணி ஆறு வரைக்கும்சென்றது.

சுமார் 20 வீடுகளில் கடல் நீர் புகுந்தது. இதில் 5க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. வீடு இடிந்ததில் பீமோன் என்ற மீனவர்காயமடைந்தார்.

கடல் நீர் புகுந்ததால் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்த கிராம மக்கள் இரயுமன்துறை சர்ச்சில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.பூத்துறை பகுதியிலும் இதே போல கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இப்பகுதியை சேர்ந்து மக்களும் அருகிலுள்ள சர்ச்சில்பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த திடீர் கடல் கொந்தளிப்பால் 2 மீனவ கிராமங்களிலும் பெரும் பதட்டமும், பீதியும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அறிந்ததும்இப்பகுதிக்கு கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ராமசுப்பிரமணி தலைமையில் போலீஸாரும், பத்மநாபபுரம் கோட்டாட்சித்தலைவர் சண்முகவேல் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

கடல் அரிப்பு காரணமாகவே கடல் நீர் ஊருக்குள் புகுந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+