அருணா கொலை: எஸ்.ஏ. ராஜாவுக்கு ஜாமீன்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில், முக்கியக் குற்றவாளியான கல்வி நிறுவனங்களின் அதிபர் எஸ்.ஏ.ராஜாஉள்ளிட்ட 4 பேருக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

ஆலடி அருணா கொலை வழக்கில் எஸ்.ஏ.ராஜா மற்றும் கூலிப் படையைச் சேர்ந்த வேல்துரை, ரவிக்குமார், தென்காசி பரமசிவம்,கண்ணன் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் எஸ்.ஏ.ராஜா, ரவிக்குமார், கண்ணன், பரமசிவம் ஆகியோர்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்திருந்தனர்.

இந்த மனுக்களை நீதிபதி ஏ.ஆர்.ராமலிங்கம் விசாரித்தார். ராஜா தரப்பு வழக்கறிஞர் கிருஷ்ணமணி வாதிடுகையில், வழக்கில்குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. எனவே எஸ்.ஏ.ராஜாவுக்கு ஜாமீன் வழங்குவதில் எந்தத் தடையும் இல்லைஎன்றார்.

இதேபோல, மற்ற மனுதாரர்கள் சார்பில் அவர்களது வழக்கறிஞர்கள் வாதிட்டனர். வாதங்களைக் கேட்ட நீதிபதி ராமலிங்கம்,எஸ்.ஏ. ராஜா உள்ளிட்ட 4 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

எஸ்.ஏ.ராஜா சென்னையில் தங்கியிருந்து தினமும் காலை 11 மணிக்கு சென்னை தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில்ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், ரவிக்குமார் உள்ளிட்ட 3 பேரும் கோவை தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில்ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+