கம்ப்யூட்டர் சயின்ஸ், இ அண்ட் சி படிப்புகளுக்கு கடும் கிராக்கி
சென்னை:
பிளஸ் டூவில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைந்த மாணவ, மாணவிகளில் பெரும்பாலானோர் கடந்த வருடங்களைப்போலவே இந்த ஆண்டும் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் தகவல் தொழில் நுட்பம்தொடர்பான பிற படிப்புகளில் சேருவதற்கே ஆர்வம் காட்டுகின்றனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டன. தேர்வு எழுதியவர்களில் 76.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில்மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 79.3 சதவீத மாணவியரும், 74.1 சதவீத மாணவர்களும் தேர்ச்சிபெற்றுள்ளனர்.
எனவே மருத்துவப் படிப்பில் சேருவதற்கான போட்டி வலுவாகவும், பொறியியல் படிப்பில் சேருவதற்கான போட்டி முந்தையஆண்டைப் போல இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதய சூழ்நிலையில் கட் ஆப் மதிப்பெண் கடந்த ஆண்டைவிட குறைந்தே இருக்கும் என்றும் தெரிகிறது.
கடந்த வருடங்களைப் போலவே இந்த வருடமும் கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் தகவல்தொழில் நுட்ப படிப்புகளில் சேருவதற்கே இந்த வருடமும் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
கடந்த பல ஆண்டுகளாக கிண்டி பொறியியல் கல்லூரி உட்பட சுமார் 30 பொறியியல் கல்லூரிகளில் மட்டும் கேம்பஸ்இன்டர்வியூக்கள் நடத்தப்பட்டன. பிறகு அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த இதர கல்லூரிகளிலும் கேம்பஸ் இன்டர்வியூநடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காகவே மாநில வேலை வாய்ப்பு மையமும் உருவாக்கப்பட்டது.
இதன் மூலம் சென்னை, மதுரை , கோவை ஆகிய 3 மண்டலங்களில் அவற்றின் எல்லைகளுக்கு உட்பட்ட பொறியியல்கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களுக்கும் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தப்பட்டு விப்ரோ, இன்போசிஸ், டி.சி.எஸ் உட்பட பலமுன்னணி நிறுவனங்கள் ஏராளமான மாணவர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இன்னும் சில ஆண்டுகளில் தகவல் தொழில் நுட்பம் மற்றும் சாப்ட்வேர் தொழில் இன்னும் வேகமாக வளர்ச்சி அடையும்என்பதால் அடுத்த சில ஆண்டுகளில் இந்த துறையில் வேலை வாய்ப்பு மேலும் பல மடங்காக உள்ளது.
பி.இ உயிரித் தொழில்நுட்பப் பாடத்திற்கும் மாணவர்களிடையே வரவேற்பு காணப்படுகிறது. இதுதவிர பி.இ. சிவில் பிரிவுக்கும்மாணவர்களிடையே குறிப்பிடத்தக்க வரவேற்பு காணப்படுகிறது.
பெரும்பாலான மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேரவே விரும்புகிறார்கள். பிற கல்லூரிகளில் சேருவதில்மாணவர்களிடையே பெருமளவு தயக்கம் காணப்படுகிறது. மாணவர்களின் முதல் சாய்ஸாக அண்ணா பல்கலைக்கழகம் உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications