விநாயகர் கையில் 'பீர் பாட்டில்' !!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

விநாயகரின் கையில் பீர் பாட்டில் இருப்பது போன்ற படம் அச்சிடப்பட்ட பீர் பாட்டில்களை விற்பனை செய்த அமெரிக்க மதுதயாரிப்பு நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள லாஸ்ட் கோஸ்ட் என்ற ஒரு மது தயாரிப்பு நிறுவனம், சமீபத்தில் 'இண்டிகா' என்ற புதிய பீர் ரகத்தைவெளியிட்டது. அந்த புதிய ரக பீர் பாட்டிலில் விநாயகரின் உருவத்துடன் கூடிய லேபிள் இருந்தது.

விநாயகரின் நான்கு கைகளிலும், தும்பிக்கையிலும் பீர் பாட்டில் இருப்பது போல அந்த லேபிள் அச்சடிக்கப்பட்டிருந்தது. இதற்குஅமெரிக்காவிலுள்ள இந்துக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந் நிலையில், வாஷிங்டனிலுள்ள கோல்டன் கேட் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் பிரிஜ் திர் என்ற இந்திய அமெரிக்க சட்டமாணவர், லாஸ்ட் கோஸ்ட் மது தயாரிப்பு நிறுவனத்தின் மீது 1 பில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது குறித்து பிரிஜ் திர் கூறுகையில், அவர்களது கம்பெனி விளம்பரத்திற்காக உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கானஇந்துக்களின் மத உணர்வை எப்படி புண்படுத்தலாம்?

விளம்பரம் செய்வதற்கு பல வழிகள் இருக்கின்றன. ஆனால் இப்படியெல்லாமா விளம்பரம் செய்வார்கள்? இந்துக்களின் மனதைபுண்படுத்தியதற்காக அந்த மது தயாரிப்பு நிறுவனத்தின் மீது 1 பில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளேன்என்றார்.

இதற்கிடையே விநாயகரின் உருவ லேபிளை லாஸ்ட் கோஸ்ட் மது தயாரிப்பு நிறுவனம் விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளது.அந்த நிறுவனத்தின் உரிமையாளர் பார்பரா குரூம் கூறுகையில், எந்த இந்துவின் மனதையும் நாங்கள் புண்படுத்த விரும்பவில்லைஎன்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+