துரைமுருகனுக்கு நீதிபதி கண்டனம்
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தொடர்ந்து நீதிமன்றத்திற்கு வராமல் இருப்பதற்கு வேலூர் நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
கடந்த திமுக ஆட்சியின்போது அமைச்சராக இருந்த துரைமுருகன், வருவாய்க்கு மீறிய வகையில் ரூ. 4 கோடி வரை சொத்துசேர்த்ததாக கூறி அதிமுக ஆட்சியில் வழக்குத் தொடரப்பட்டது. துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி, மகன்உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந் நிலையில் இன்று வேலூர் நீதிமன்றத்தில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது துரைமுருகன் ஆஜராகவில்லை.
இதையடுத்து தொடர்ந்து துரைமுருகன் நீதிமன்றத்திற்கு வராமல் இருப்பது சரியல்ல, வழக்கு அடுத்த மாதம் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ஜெகன்னாதன்உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications