ரிஷிகேஷில் மே 23ல் திருக்குறள் மாநாடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ரிஷிகேஷில் வரும் 23ம் தேதி திருக்குறள் மாநாடு நடைபெறவுள்ளது.
உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம், டெல்லி தமிழ் சங்கம் மற்றும் விஜிபி உலகத் தமிழ் சங்கம் ஆகியவை இணைந்து இந்ததிருக்குறள் மாநாட்டை நடத்தவுள்ளன.
ஆய்வுரைகள், பட்டிமன்றம், கவியரங்கம் ஆகியவை மாநாட்டில் இடம் பெறவுள்ளது. நாடு என்பது யாது? என்ற தலைப்பில் 5தமிழறிஞர்கள் ஆய்வுரை வழங்குகிறார்கள்.
மாநாடு முடிந்ததும், அடுத்த நாள் டெல்லியில் பாராட்டு விழா நடக்கிறது. அதில் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்பாராட்டப்படுகிறார்கள்.
திருக்குறள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 70 தமிழறிஞர்கள் 20ம் தேதி வெள்ளிக்கிழமை டெல்லிக்குக் கிளம்புகிறார்கள்.
சில வாரங்களுக்கு முன் ரிஷிகேசில் தமிழ் வளர்த்த பக்தி என்ற ஆய்வரங்கம் நடந்தது. இதில்
நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications