மீனாட்சி: 4 பேரிடம் பெங்களூரில் "லை டிடெக்டர்" சோதனை
கரூர்:
குளித்தலை ஆசிரியை மீனாட்சி காணாமல் போன வழக்கில், அவரது கணவர் ஜோதி ராமலிங்கம் உள்ளிட்ட 4 பேரிடமும்உண்மை அறியும் கருவியைக் கொண்டு சோதனை செய்வதற்காக அவர்கள் பெங்களூர் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த ஆசிரியை மீனாட்சி காணாமல் போனது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணைநடத்தி வருகின்றனர்.
இதையடுத்து நான்கு பேருக்கும் சில நிாட்களுக்கு முன் திருச்சி அரசு மருத்துவமனையில் உடல் ஆரோக்கிய சோதனை உள்ளிட்டபல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
விரைவில் இவர்கள் பேரும் பெங்களூர் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு லை-டிடெக்டர் சோதனைகள் நடத்தப்படவுள்ளன.
இதற்கிடையே, மீனாட்சியின் வீட்டுக்கு அருகே வசித்து வரும் கார் டிரைவர் சுப்பிரமணியன் என்பவர், விசாரணை என்ற பெயரில்போலீஸார் தன்னை சித்திரவதை செய்ததாக புகார் கூறியுள்ளார்.
போலீஸாரின் கடுமையான விசாரணை காரணமாக சுப்பிரமணியனின் கை எலும்பில் முறிவு ஏற்பட்டு அவர் திருச்சி அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சுப்ரமணியன் கூறுகையில்,
பசுபதி குறித்த தகவல்களை தெரிவிக்குமாறு கூறி போலீஸார் என்னை சித்திரவதை செய்தார்கள். நான் எத்தனையோ முறைஎனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறியும், போலீஸார் என்னை சித்திரவதை செய்தார்கள். இதில் எனக்கு கை எலும்பு முறிவுஏற்பட்டுள்ளது என்றார்.