திருப்போரூர் முருகன் கோவிலுக்கு ரூ. 20 லட்சத்தில் புதிய தேர்: ஜெ. உத்தரவு
சென்னை:
சென்னை அருகே உள்ள திருப்போரூர் கந்தசாமி கோவிலுக்கு ரூ. 20 லட்சம் செலவில் புதிய மரத் தேரை உருவாக்கித் தர இந்துசமய அறநிலையத் துறைக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சட்டசபை இடைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து திருப்போரூர் கந்தசாமி கோவிலுக்கு சசிகலாவுடன்சென்ற ஜெயலலிதா அங்கு விசேஷ அர்ச்சனைகள் செய்தார்.
இந் நிலையில் தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையில்,
திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி கோவிலுக்கு ரூ. 20 லட்சம் செலவில் அழகிய மரத் தேரை உருவாக்கித் தருமாறு தமிழக அரசின்இந்து சமய அறநிலையத் துறைக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
அதே போல சென்னை வியாசர்பாடி மகாகவி பாரதி நகர் பகுதியில் தீ விபத்தில் சேதமடைந்த விநாயகர் கோவிலை ரூ. 1 லட்சம்செலவில் சீரமைத்து, ரூ. 50,000 செலவில் புதிய விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்யவும் முதல்வர் ஜெயலலிதா நேற்றுஉத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, தினமலர் நிாளிதழ் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிர்வாக ஆசிரியர் ராகவன் ஆகியோர் முதல்வர்ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் சந்தித்து, தினமலர் நாளிதழ் மூலம் சேகக்கப்பட்ட ரூ. 67.27 லட்சம் சுனாமி நிவாரணநிதியை வழங்கினர்.












Click it and Unblock the Notifications