சேது சமுத்திரத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி:
சேது சமுத்திரம் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இதற்காக ரூ. 2,427.40 கோடி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
சேது சமுத்திரத் திட்டம், சென்னையில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் ஆகியவற்றை விரைவில் (தமிழக சட்டமன்றத்தேர்தலுக்கு முன்பாக) தொடங்க வேண்டும் என பிரதமர் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடமும் கருணாநிதிவலியுறுத்தினார்.
இந் நிலையில் இன்று அமைச்சரவையைக் கூட்டினார் பிரதமர். அதில் சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்துக்கு ஒப்புதல்அளிக்கப்பட்டதோடு, இத் திட்டத்துக்கு ரூ. 2,427.40 கோடியை ஒதுக்கவும் அனுமதி தரப்பட்டது.
கேபினட் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இதனைத் தெரிவித்தார். அவர் கூறுகையில்,
சேது சமுத்திரத் திட்டம் தமிழகத்தின் 100 ஆண்டுக் கனவு. ராமேஸ்வரம் கடல் பகுதியில் நிறைவேற்றப்படவுள்ள இத் திட்டத்துக்குஒப்புதல் அளித்ததன் மூலம் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழியையும் பட்ஜெட் வாக்குறுதியையும்மத்திய அரசு நிறைவேற்றிவிட்டது.
இத் திட்டத்தை அமலாக்குவற்காக சேது சமுத்திரக் கழகம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்படும். இத் திட்டத்தின்படி வங்கக்கடலுக்கும் அரபிக் கடலுக்கும் இடையே கடலுக்குள் மாபெரும் கால்வாய் உருவாக்கப்படும். தமிழகத்துக்கும் இலங்கைக்கும்இடையிலான கடல் பகுதியில் ஆழம் குறைவு என்பதால் பெரிய கப்பல்கள் செல்ல முடிவதில்லை.
இப்போது உருவாக்கப்படும் இந்தக் கடல் கால்வாய் காரணமாக, கப்பல்கள் இலங்கையை சுற்றிக் கொண்டு செல்வதுதவிர்க்கப்படும்.
சூயஸ் கால்வாய், பானாமா கால்வாய் போல இந்தக் கால்வாயும் பலவிதமான நேரடி, மறைமுக பலன்களை நாட்டுக்கு வழங்கும்.இத் திட்டத்தில் போடப்படும் பணம் நிச்சயம் திரும்பி வரும். அத்தோடு நாட்டின் பாதுகாப்புக்கும் இந்தக் கால்வாய் பெரும்சேவையாற்றப் போகிறது.
ரூ. 2,427.40 கோடி செலவு பிடிக்கும் இத் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ. 495 கோடியும், நாட்டின் பல்வேறு துறைமுக பொறுப்புக்கழகங்கள் ரூ. 50 கோடியும், சென்னை, எண்ணூர், விசாகபட்டினம், பாரடீப் ஆகிய இடங்களில் உள்ள கடலடி தூர்வாறும்கழகங்கள் தலா ரூ. 30 கோடியும் வழங்கும். இதைத் தவிர பிற அமைப்புகளும் நிதி வழங்கவுள்ளன.
அத்தோடு ரூ. 226 கோடிக்கு தனியாரிடமிருந்தோ அல்லது பங்குச் சந்தையில் இருந்தோ நிதி திரப்படும். தூத்துக்குடி துறைமுகப்பொறுப்புக் கழகம் மூலமாக சேது சமுத்திரத் திட்டப் பணிகள் நிறைவேற்றப்படும் என்றார் சிதம்பரம்.
இந்தக் கால்வாய் அமைந்தால் கப்பல்கள் இலங்கையை 424 கடல் மைல்கள் வீணாக சுற்றுவதையும், 30 மணி நேரத்தையும், எரிபொருளையும் சேமிக்கலாம்.
அதே போல தாய்லாந்தில் சோங்கலா என்ற இடத்தில் ஒரு இந்தியத் துணைத் தூதரகத்தைத் திறக்கவும் அமைச்சரவை ஒப்புதல்அளித்தது.












Click it and Unblock the Notifications