For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாக்கு வங்கியாக மாறும் சுய உதவி குழுக்கள்: மகளிர் அமைப்பு கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

தமிழகத்தில் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஆளுங்கட்சியினரின் வாக்கு வங்கிகளாக செயல்பட்டு வருவதாகஅனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இச் சங்கத்தின் 2 நாள் கூட்டம் சேலத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுகுறித்து அமைப்பின் பொதுச் செயலாளர் வாசுகி கூறுகையில்,

தமிழகத்தில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களை வாக்கு வங்கியாக மாற்றி வருகிறார்கள். அவர்களதுசெயல்பாடுகள், ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக மாற்றும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். இதுதவறான போக்கு.

மகளிர் சுய உதவிக் குழுக்களை யார் ஆரம்பித்திருந்தாலும், அவை சுயமாகவே இயங்க அனுமதிக்க வேண்டும். அவர்களைவாக்கு வங்கிகளாக பயன்படுத்தக் கூடாது.

சமீபத்தில் நடந்த காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தலிலும் மகளிர் சுய உதவிக் குழுக்களை அதிக அளவில் வாக்குவங்கிகளாக பயன்படுத்தியுள்ளனர்.

அனைத்து மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் பாரபட்சமின்றி சலுகைகள் கிடைக்க வேண்டும் என்றார் வாசுகி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X