இந்தியாவில் முதலீடு: ஆஸ்திரேலியா ஆர்வம்
மெல்போர்ன்:
இந்தியாவில் சாப்ட்வேர், உயிரித் தொழில் நுட்பம் மற்றும் சுற்றுப்புறச் சூழல் தொழில் நுட்பத்தில் அதிக அளவில் முதலீடு செய்யஆஸ்திரேலியா ஆர்வம் தெரிவித்துள்ளது.
இந்திய- ஆஸ்திரேலிய வியாபார கவுன்சில் கூட்டம் மெல்போர்னில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் விக்டோரியா மாகாண தகவல்தொழில் நுட்ப அமைச்சர் மர்ஷா தாம்ப்ஸன் கலந்து கொண்டு பேசுகையில், இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்ய விரும்புகிறோம்.
இந்தியாவின் டி.சி.எஸ்., விப்ரோ, இன்போசிஸ், சத்யம் உட்பட 15 முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்கள் ஆஸ்திரேலியாவில் சிறப்பாககாலூன்றி உள்ளன. இதே போல மேலும் பல நிறுவனங்கள் ஆஸ்திரேலியாவில் கால் பதிக்க வேண்டும் வேண்டும் என்றார்.
இக் கூட்டத்தில் பேசிய இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் கமல்நாத் பேசுகையில், இந்தியாவில் ஆஸ்திரேலியாவின் முதலீட்டை விடஆஸ்திரேலியாவில் இந்திய நிறுவனங்களின் முதலீடு அதிகமாக உள்ளது.
இனிமேல் இந்த நிலை மாறி இந்தியாவில் ஆஸ்திரேலியாவின் முதலீடு அதிகமாக வேண்டும் என்றார்.