For Daily Alerts
Just In
இந்திய அணியின் பயிற்சியாளர் கிரேக் சாப்பல்!
டெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் கிரேக் சாப்பல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த நியூஸிலாந்து நாட்டை சேர்ந்த ஜான் ரைட்டின் பதவிக்காலம் முடிவடைந்ததைதொடர்ந்து புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வதில் கிரிக்கெட் வாரியம் கடந்த சில தினங்களாக ஈடுபட்டு வந்தது.
நேற்று டெல்லியில் கிரிக்கெட் வாரிய தலைவர் ரன்பீர் சிங் தலைமையில் இதற்கான நேர்காணல் நடைபெற்றது. இந்த நேர் காணல் குழுவில்முன்னாள் வீரர்கள் கவாஸ்கர், ரவிசாஸ்திரி, வெங்கட்ராகவன், வாரிய முன்னாள் தலைவர் டால்மியா, வாரிய செயலாளர் நாயர் ஆகியோர்இடம் பெற்றிருந்தனர்.
இந் நிலையில் புதிய பயிற்சியாளராக கிரேக் சாப்பல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
Comments
Story first published: Friday, May 20, 2005, 5:30 [IST]