For Daily Alerts
Just In
3 கைதிகள் சாவு: விசாரணைக்கு நீதிபதி நியமனம்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி மத்திய சிறையில் 3 கைதிகள் விஷச் சாராயம் குடித்து இறந்தது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி வேணுகோபால் விசாரணைநடத்துவார் என்று அம் மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சிறைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 4 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். 3 கைதிகள் இறந்ததுதொடர்பாக நீதி விசாரணை நடக்கும் என மாநில அரசு அறிவித்திருந்தது.
தற்போது, இந்த விசாரணைக்காக ஓய்வு பெற்ற நீதிபதி வேணுகோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.
3 மாதங்களுக்குள் அவர் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார்.
Comments
Story first published: Friday, May 20, 2005, 5:30 [IST]