இங்கிலாந்தில் பள்ளி மாணவன் கடத்தல்: பெண் உட்பட 4 இந்தியர்களுக்கு சிறை
லண்டன்:
லண்டனில் 11 வயது பள்ளி மாணவனை கடத்தி அவனது பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டிய ஒரு பெண் உட்பட 4 இந்தியர்களுக்குஇங்கிலாந்து நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கியுள்ளது.
இந்தியாவை சேர்ந்த ரவிதீப் பாபு (வயது 23), அமர்ஜித் தாரிவார் (வயது (30), குர்னாம் தனோவா (வயது 22) மற்றும் ஆயிஷா செளத்ரிஆகிய 4 பேரும் சேர்ந்து, லண்டனில் பள்ளி சென்று வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த 11 வயது மாணவனை காரில் கடத்தி சென்றனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், சிறுவனைக் கடத்திய 4 இந்தியர்களையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணைமிடில்ஸெக்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரிச்சர்ட் மாத்சன், குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் சிறை தண்டனைவழங்கி தீர்ப்பளித்தார்.
முதல் குற்றவாளி ரவிதீப் பாபுவுக்கு 12 வருடங்களும், அமர்ஜித் தரிவாருக்கு 7 வருடங்களும், குர்னாம் தனோவாவுக்கு 6 வருடங்களும்மற்றும் ஆயிஷா செளத்ரிக்கு மூன்றரை வருடங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சிறை தண்டனை முடிந்ததும் 4 பேரையும் இந்தியாவுக்கு நாடு கடத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிபதி தனது தீர்ப்பில் கூறும்போது, 4 பேரும் செய்த குற்றம் மன்னிக்க முடியாததாகும். என்னுடைய கருத்தின் படி நீங்கள் மிகவும்அபாயகரமானவர்கள் என்று குறிப்பிட்டார்.
இவர்கள் 4 பேரும் சட்டத்திற்கு புறம்பாக இங்கிலாந்தில் குடியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.