ஆதியின் வட மாநில மோசடிகள்: 4 தனிப்படைகள் அமைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆதிகேசவனின் வட மாநில மோசடி விவகாரங்கள் குறித்து விசாரிக்க 4 போலீஸ் தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டு இந்தியர்களிடம் கடன் வாங்கித் தருவதாக கூறி பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்த ஆதிகேசவன் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து இந்த மோசடிகள் குறித்து விசாப்பதற்காக 4 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நான்கு தனிப் படையினரும் நாளைமறுதினம் இந்த மாநிலங்களுக்கு கிளம்புகின்றனர்.
இதற்கிடையே, ஆதிகேசவன் கொடுத்த நூற்றுக்கணக்கான காசோலைகள் திரும்பி வந்துள்ளதால், அவர் மீது தனியாக செக் மோசடிவழக்கும் பதிவு செய்யப்படவுள்ளது. இதுதொடர்பாக விசாரணைக்கு வருமாறு ஆதிகேசவன் கணக்கு வைத்துள்ள 117 வங்கிகளின்மேலாளர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படவுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications