சென்னை விமான நிலையத்தை நவீனப்படுத்தவேண்டும்: தயாநிதி மாறன்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
சென்னை விமான நிலையத்தை நவீனப்படுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விமானப் போக்குவரத்து துறைஅமைச்சரிடம் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தயாநிதி மாறன், மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் பிரபுல் படேலுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,சென்னை விமான நிலையத்தை நவீன மயமாக்குவது குறித்து தாங்கள் எனக்கு எழுதிய கடிதத்தில் விமான பயணியர் பாலம்குறித்து என்னுடைய ஆலோசனைகளை தாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிகிறது.
போதிய அளவு பயணியர் பாலங்கள் அமைவது பயணிகள் எளிதாக விமானத்தை சென்றடைய உதவும்.
எனவே சென்னை விமான நிலையத்தில் மேற்குறிப்பிட்ட எண்ணிக்கையில் பயணியர் பாலங்கள் அமைப்பதற்கு தாங்கள் முழுமுயற்சி எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications