For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை விமான நிலையத்தை நவீனப்படுத்தவேண்டும்: தயாநிதி மாறன்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

சென்னை விமான நிலையத்தை நவீனப்படுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விமானப் போக்குவரத்து துறைஅமைச்சரிடம் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தயாநிதி மாறன், மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் பிரபுல் படேலுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,சென்னை விமான நிலையத்தை நவீன மயமாக்குவது குறித்து தாங்கள் எனக்கு எழுதிய கடிதத்தில் விமான பயணியர் பாலம்குறித்து என்னுடைய ஆலோசனைகளை தாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிகிறது.

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான நிலையத்தில் 6 பயணியர் பாலங்களும், பன்னாட்டு விமான நிலையத்தில் 3பயணியர் பாலங்களும் (ஏர் பஸ்-ஏ380 விமானங்களுக்கு தகுந்ததாகவும், முதல் வகுப்பு பயணிகளுக்கு தனி வழிஅமைந்ததாகவும் இருக்க வேண்டும்) வேண்டும்.

போதிய அளவு பயணியர் பாலங்கள் அமைவது பயணிகள் எளிதாக விமானத்தை சென்றடைய உதவும்.

எனவே சென்னை விமான நிலையத்தில் மேற்குறிப்பிட்ட எண்ணிக்கையில் பயணியர் பாலங்கள் அமைப்பதற்கு தாங்கள் முழுமுயற்சி எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X