அரசியல் கட்சியில் சேர்ந்தார் ஜெயலட்சுமியின் முன்னாள் வழக்கறிஞர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தனிக் கட்சி நடத்தி வந்து, பின்னர் பாஜகவில் இணைந்த காமாட்சி நாயுடு, பாஜகவிலிருந்து விலகி மீண்டும் தனிக் கட்சி தொடங்கியுள்ளார்.இந்தக் கட்சியின் தென் மாவட்ட பொறுப்பாளராக ஜெயலட்சுமியின் முன்னாள் வழக்கறிஞர் அழகர்சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

திராவிட தெலுங்கர் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் தனிக்கட்சி நடத்தி வந்தவர் காமாட்சி நாயுடு. "யாரையும் பாதிக்காத வகையில்"கட்சி நடத்தி வந்த காமாட்சி நாயுடுவை, பாஜக தேசியச் செயலாளர் இல.கணேசன், அழைத்து பாஜகவில் சேருமாறு கேட்டுக் கொள்ளவே,கட்சியை கலைத்து விட்டு பாஜகவில் ஐக்கியமானார்.

ஆனால் கட்சியில் அவருக்கு முக்கியப் பொறுப்புகள் எதுவும் கொடுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த காமாட்சி நாயுடு,கட்சியிலிருந்து விலகி விட்டார்.தற்போது திராவிட தமிழ் தெலுங்கு முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை அவர் தொடங்கியுள்ளார். இதுகுறித்து அவர்கூறுகையில், எங்களது கட்சியின் கொடியாக, மேலே சிவப்பும், கீழே மஞ்சளும் இருக்கும். கட்சியின் நிறுவனத் தலைவர் நான்.

தென் மாவட்டங்களின் அமைப்பாளராக, ஜெயலட்சுமியின் வழக்கை முன்பு கையாண்ட, வழக்கறிஞர் அழகர்சாமியை நியமித்துள்ளேன்.வருகிற 29ம் தேதி புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவர்.

வருகிற சட்டசபைத் தேர்தலில் நடிகர் விஜயகாந்தின் கட்சியுடன் கூட்டணி வைத்துப் போட்டியிடுவோம்.

மதச் சிறுபான்மையினருக்குக் கொடுக்கப்படும் சலுகைகளை, மொழிச் சிறுபான்மையினருக்கும் கொடுக்க வேண்டும் என்பதே எங்களதுமுக்கிய கோஷம் என்றார் காமாட்சி நாயுடு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+