ஆசிரியை மீனாட்சி வழக்கு: 4 பேரிடம் நாளை "லை டிடெக்டர்" சோதனை!
சென்னை:
குளித்தலை ஆசிரியை மீனாட்சி காணாமல் போன வழக்கில், அவரது கணவர் உள்ளிட்ட 4 பேரிடம் உண்மை கண்டறியும் கருவி மூலம்சோதனை நடத்துவதற்காக, நான்கு பேரையும் சிபிசிஐடி போலீஸார் இன்று இரவு பெங்களூருக்கு அழைத்துச் செல்கின்றனர்.
கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த ஆசிரியை மீனாட்சி காணாமல் போய் பல மாதங்கள் ஆகியும் இதுவரை அவர் என்ன ஆனார்என்பது தெரியவில்லை. சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை நடத்தியும் இதுவரை ஒரு துப்பும் கிடைக்கவில்லை.
இதுதொடர்பான அடிப்படை மருத்துவ பரிசோதனைகளை திருச்சி அரசு மருத்துவமனையில் சமீபத்தில் போலீஸார் மேற்கொண்டனர்.இதைத் தொடர்ந்து நான்கு பேரையும் இன்று இரவு ரயில் மூலம் பெங்களூருக்கு சிபிசிஐடி போலீஸார் அழைத்துச் செல்கிறார்கள். நாளைஇவர்களிடம் உண்மை கண்டறியும் கருவி மூலம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக, தனிப்படை போலீஸார் ஈரோட்டில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications