டெல்லி குண்டுவெடிப்பு: சென்னை தியேட்டர்களுக்கு பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சர்ச்சைக்குரிய இந்திப் படமான ஜோ போலே சோ நஹல் படம் வெளியிடப்பட்ட டெல்லி தியேட்டர்களில் நடந்த வெடிகுண்டுசம்பவத்தைத் தொடர்ந்து, சென்னையில் இப்படம் வெளியிடப்பட்டுள்ள தியேட்டர்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஜோ போலே சோ நஹல் படத்தின் பெயருக்கு சீக்கியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தப் படத்திற்கு தணிக்கைக் குழுஅனுமதி தரக் கூடாது என்று சீக்கியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் எதிர்ப்பையும் மீறி தணிக்கைக் குழுவினர் படத்தின்பெயருக்கு அனுமதி அளித்துள்ளனர்.

தற்போது இப்படம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் திரையிடப்பட்டுள்ளது. ஆனால் சீக்கியர்களின் எதிர்ப்பு காரணமாகபஞ்சாப்,ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இப்படம் வெளியிடப்படவில்லை.

இந் நிலையில் டெல்லியில் இப்படம் திரையிடப்பட்ட 2 தியேட்டர் வளாகங்களில் நேற்று இரவு குண்டு வெடிப்பு நடந்தது. இதில் ஒருவர்பலியாகியுள்ளார். ஏராளமான பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சென்னையில் இப்படம் வெளியிடப்பட்டுள்ள அனு ஈகா, மெலோடி, சங்கம் ஆகிய தியேட்டர்களுக்குபோலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மெலோடி தியேட்டரைத் தவிர மற்ற தியேட்டர்களில் இப்படம் வெளியிடப்படுவதுநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மெலோடி தியேட்டரிலும் இன்று முதல் படம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+