விடைத்தாள்: மாணவர்கள் குடும்பத்துடன் தலைமறைவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

விடைத்தாள் மோசடியில் தொடர்புடைய ஒரு மாணவி உட்பட மேலும் 27 மாணவர்கள் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டனர்.அவர்களை பிடிக்க தனிப்படை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய தேர்வு விடைத்தாள்களை மாற்றி மோசடி செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக தனியார் என்ஜினியரிங் கல்லூரிகளை சேர்ந்த 14 மாணவர்கள் மற்றும் அண்ணா பல்கலைக்கழக தற்காலிகஊழியர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

மோசடி நடந்தது தெரியவந்ததால், விடைத்தாள்கள் முழுவதும் பரிசோதிக்கப்பட்டது. இதில் மேலும் 27 விடைத்தாள்கள் மாற்றப்பட்டதுதெரியவந்தது. இந்த விடைத்தாள்களுக்கு உரிய மாணவர்களின் பெயர் பட்டியல் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த மாணவர்களை பிடிக்க போலீஸார் அவர்களது வீடுகளுக்கு சென்றனர். இதில் பல மாணவர்கள் வீடுகளை காலிசெய்து விட்டுகுடும்பத்தோடு தலைமறைவாகி விட்டனர்.

பெரும்பாலான மாணவர்கள் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்பதால் அங்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.இதனால் 27 மாணவர்களையும் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் பதுங்கியுள்ள மாணவர்களை அவர்களது செல்போன்களின் மூலம் தொடர்பு கொண்டு பிடிக்கவும் போலீஸார் முயற்சிசெய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+