For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிரடிப்படை காவலர் குடும்பத்துக்கு ஜெ. நிதியுதவி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சந்தனக் கடத்தல் வீரப்பனால் சுட்டுக் கொல்லப்பட்ட அதிரடிப்படை காவலர் நாகராஜனின் குடும்பத்துக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ. 8.40லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், வீரப்பனை சுட்டு வீழ்த்திய அதிரடிப் படையினர்ஒவ்வொருவருக்கும் ஒரு படி பதவி உயர்வு, ரூ. 3 லட்சம் ரொக்கம், இலவச வீட்டு மனை ஆகியவை வழங்கப்பட்டது. அதே போல,வீரப்பனுடன் நடந்த மோதலில் உயிரிழந்தவர்களுக்கும் உரிய நிவாரணத் தொகையை வழங்க முதல்வர் ஆணையிட்டார்.

அதன் பேரில் வீரப்பனுடன் கடந்த 1991ம் ஆண்டு நடந்த மோதலின் போது உயிரிழந்த காவலர் நாகராஜன் என்பவருக்கும் ரூ. 10.40லட்சம் அளிக்க முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் ரூ. 2 லட்சம் தொகை உடனடியாக அளிக்கப்பட்டு விட்டது.

கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் நடந்த அதிரடிப்படையினருக்கான பாராட்டு விழாவில் நாகராஜனின் மனைவி மாதேஸ்வரியால்கலந்து கொள்ள முடியவில்லை. மேலும் முதல்வர் கையால் மீதத் தொகையை பெற அவர் விருப்பம் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து அவரை கோட்டைக்கு வரவழைத்த முதல்வர் ஜெயலலிதா மாதேஸ்வரியிடம் ரூ.8.40 லட்சத்துக்கான காசோலையைவழங்கினார் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X