ஆதியின் மகன் சாரதியின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை:
ஆதிகேசவனின் மகன் சாரதியின் முன் ஜாமீன் மனு உயர்நீதிமன்றத்தில் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
மோசடி மன்னன் ஆதிகேசவன் தற்போது குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மோசடி வழக்கில் ஆதியின் மகன்சாரதியை போலீஸார் தேடி வந்தனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார்.
இது தொடர்பாக போலீஸார் தாக்கல் செய்த பதில் மனுவில், ஆதிகேசவன் மீது இதுவரை 35க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதுவரை வந்த புகாரிலிருந்து அவர் ரூ.5 கோடி மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
பணம் கொடுத்தவர்களை ஆதிகேசவனின் மகன் சாரதி, அடியாட்களுடன் சென்று மிரட்டியுள்ளார். விசாரணை முக்கிய கட்டத்தைநெருங்கியுள்ளது. இந்த நேரத்தில் அவரது மகன் சாரதிக்கு முன் ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும். சாட்சியங்களைஅவர் கலைத்து விடுவார் என்று கூறியிருந்தனர்.
இதைத் தொடர்ந்து சாரதியின் ஜாமீன் மனுவை நீதிபதி சக்கரியா உசேன் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications