விழுப்புரம் கலெக்டர் கடலில் மூழ்கினார்: கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் கடலில் மூழ்கினார். கவலைக்கிடமான நிலையில் உள்ள அவருக்கு பாண்டிச்சேரியிலுள்ளதனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள முதலியார்குப்பம் பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரண உதவிகள்வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பாலச்சந்திரன், ஐஏஎஸ் அதிகாரி இறையன்பு மற்றும்அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கடலில் இரு படகுகளும் சென்று கொண்டிருந்த போது கலெக்டர் மற்றும் அதிகாரிகள் சென்று கொண்டிருந்த படகு பாரம்தாங்காமல் திடீரென கவிழ்ந்தது. இதில் கலெக்டர் பாலச்சந்திரன் மற்றும் இறையன்பு ஆகியோர் கடலில் மூழ்கினர்.
இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் உடனடியாக கடலில் குதித்து இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.கலெக்டர் பாலச்சந்திரன் அதிக அளவு கடல் நீரை குடித்ததால் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. இதனால் உடனடியாகபாண்டிச்சேரியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்புஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications