கலவையில் காஞ்சிப் பெரியவர் பிறந்த நாள் விழா
Subscribe to Oneindia Tamil
கலவை:
காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியாக இருந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 112வது பிறந்த நாள் விழாகலவையில் கொண்டாடப்பட்டது.
அதிகாலை 4.30 மணியளவில் பெரியவரின் சமாதி இருக்கும் காஞ்சிபுரம் சங்கரமடத்திற்கு ஜெயேந்திரர் சென்று அங்குள்ளபிருந்தாவனத்தில் உள்ள சமாதியில் பூஜை செய்தார். பின்னர் கலவை திரும்பினார்.
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பக்தி, பஜனைப் பாடல்கள் இசைக்கப்பட்டன. மாலையில் சந்திரசேகரேந்திர சரஸ்வதிசுவாமிகளின் அலங்கரிக்கப்பட்ட படம், மாட்டு வண்டியில் வைத்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
இந்த ஊர்வலத்தில் ஜெயேந்திரர், விஜயேந்திரர், உள்ளூர் சுவாமிகளான கலவை கமலக்கன்னியம்மன் சச்சிதானந்த சுவாமிஆகியோர் கலந்து கொண்டு நடந்து சென்றனர். பல்வேறு வீதிகள் வழியாக கலவை மடத்தை அடைந்தது ஊர்வலம்.












Click it and Unblock the Notifications