டெண்டுல்கரின் முழங்கையில் ஆபரேஷன்
டெல்லி:
இந்திய கிரிக்கெட் வீரர் டெண்டுல்கருக்கு லண்டன் மருத்துவமனையில் இடது முழங்கையில் ஆபரேஷன் நடந்தது. இதனால்அவரால் அடுத்த 4 மாதங்களுக்கு கிரிக்கெட் ஆடமுடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெண்டுல்கருக்கு கடந்த சில வருடங்களாகவே இடது முழங்கையில் பிரச்சினை இருந்து வருகிறது. இதற்காக அவர் பலமுறைசிகிச்சை எடுத்துக் கொண்ட போதிலும் குணமடையவில்லை. இதனால் இடையிடையே விளையாட்டிலிருந்து அவர் ஓய்வெடுத்துவந்தார்.
இந் நிலையில் முழங்கை பிரச்சினைக்கு சிகிச்சை பெறுவதற்காக டெண்டுல்கர் லண்டன் சென்றார். அவருடன் இந்திய கிரிக்கெட்அணியின் உடற்பயிற்சி மருத்துவர் குளோஸ்டரும் சென்றார்.
இது தொடர்பாக சென்னையில் கிரிக்கெட் வாரிய செயலாளர் எஸ்.கே. நாயர் கூறுகையில், டெண்டுல்கரை பரிசோதித்த லண்டன்மருத்துவமனை டாக்டர்கள் அவருக்கு கண்டிப்பாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.
இதனால் நேற்று அவரது இடது முழங்கையில் ஆபரேஷன் செய்யப்பட்டது. அவர் குறைந்த பட்சம் 15 வாரங்கள் ஓய்வெடுக்கவேண்டியதிருக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications