அரசு மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து தியாகி தற்கொலை
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
அரசு பொது மருத்துவமனையில் சரிவர சிகிச்சை அளிக்காததால், மனமுடைந்த சுதந்திரப் போராட்ட தியாகி வெங்கடேசன், அரசுமருத்துவமனை மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
ஆனால் அங்கு அவருக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர், அரசுமருத்துவமனை மாடிக்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்தார்.
இதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். அரசு மருத்துவமனையில் சரிவர சிகிச்சைதரவில்லை என்று கூறி சுதந்திரப் போராட்ட தியாகி ஒருவர் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டிருப்பதுபுதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications