வாக்காளர் பட்டியல்: காலக்கெடுவை நீட்டிக்க திமுக கோரிக்கை
சென்னை:
வாக்காளர் பட்டியலில் பெயர்களை நீக்குவது, சேர்ப்பது ஆகியவற்றுக்கான காலக்கெடுவை இந்த மாதக் கடைசியிலிருந்துஅடுத்த மாதம் 30ம் தேதிக்கு நீட்டிக்க வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதுதொடர்பாக திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் டாண்டனுக்குகடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தவர்களின் பெயர்களும் 999 பட்டியலின் கீழ்சேர்க்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் தக்க பதில் கிடைக்கவில்லை.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியில் மட்டும் 20,000 வாக்காளர்களின் பெயர்கள் இதுபோல 999 பட்டியலின் கீழ்சேர்க்கப்பட்டுள்ளது.
இந்தக் குழப்பம் காரணமாக அரசியல் கட்சிகளால் வாக்காளர் பட்டியலை சரி பார்க்கும் பணியை சரிவர செய்ய இயலவில்லை.எனவே வாக்காளர்கள் பெயர் நீக்குவது, சேர்ப்பது போன்ற பணிகளுக்கான காலக்கெடுவை வருகிற 30ம் தேதிக்குப் பதில் அடுத்தமாதம் 30ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.