லண்டனில் இந்திய மாணவி குத்திக் கொலை

Subscribe to Oneindia Tamil

லண்டன்:

லண்டனில் கத்திக்குத்து காயங்களுடன் இந்திய மாணவி தனது வீட்டின் அருகே பிணமாக கிடந்தார். அவர் எப்படிகொல்லப்பட்டார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

லண்டனில் வசித்து வருபவர் சுரேஷ் ராய்தாதா. இந்தியரான இவர், அங்கு எலக்டிரிகல் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு 2 மகள்களும் 1 மகனும் உள்ளனர்.

மூத்த மகளான ஜெஷ்மா ராய்தாதா கென்டான் என்ற இடத்திலுள்ள கிளார்மண்ட் பள்ளியில் இசைத்துறையில் பள்ளி இறுதிவகுப்பு படித்து வந்தார். இவர் நன்றாக பாடுவாராம்.

மேடைப்பாடகியாக வரவேண்டும் என்று ஆசைப்பட்ட ஜெஷ்மா, தனது ஆசையை இணையதளத்தில் வெளியிட்டிருந்தார். அவர்ஒரு பாடலை பாடி அதையும் இணையதளத்தில் வெளியிட்டிருந்தார்.

இந் நிலையில் ஜெஷ்மாவின் 18வது பிறந்த நாளுக்கு 3 நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்து போனார். அவர் தனதுவீட்டின் அருகே கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார். பள்ளி முடிந்து குறுக்குப் பாதையில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்த போது யாரோ அவரை கத்தியால் குத்தி கொன்றிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

இது குறித்து ஜெஷ்மாவின் தாய் கூறுகையில், மாலை வரை அவள் வீடு திரும்பாததால் செல்போனில் எஸ்எம்எஸ் மூலம் தகவல்கொடுத்தேன். ஆனால் அவளிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை.

மாலை 6 மணி வரையிலும் ஜெஷ்மா வராததால் அவளது தோழிகளிடம் விசாரித்தேன். ஆனால் யாருக்கும் ஜெஷ்மா எங்குபோனாள் என்ற விவரம் தெரியவில்லை. இரவு 10 மணிக்கு போலீஸுக்கு தகவல் கொடுத்தோம்.

வீட்டில் அவளுக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது. ரொம்ப சந்தோஷமாக இருந்தாள். விடுமுறையை தனது சிநேகிதிகளுடன்ஒரு குட்டித் தீவில் கழிக்க திட்டமிட்டிருந்தாள்

அழகான எங்கள் மகளை ஒரு தீயவவன் எங்களிடமிருந்த பறித்துக் கொண்டான் என்றார்.

இந்த மர்மக் கொலை குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+