தமிழக அமைச்சர்களுடன் ஜெ. அவசர ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அமைச்சர்களுடன் முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இன்று அவசர ஆலோசனை நடத்தினார்.
தமிழக அமைச்சரவை கூட்டம், கோட்டையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று நடந்தது. இதில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர். சுமார் 30 நிமிடம் நடந்த இந்தக் கூட்டத்தில், சட்டசபை தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்களை வைத்து பார்க்கும் போது இந்த ஆண்டு இறுதிக்குள் பொதுத்தேர்தலை சந்திக்க ஜெயலலிதா தயாராகி விட்டதாகவே தெரிகிறது.












Click it and Unblock the Notifications