For Daily Alerts
Just In
தமிழ்நாட்டில் சூறாவளியுடன் மழை பெய்யும்- வானிலை இலாகா
சென்னை:
தமிழ்நாட்டில் இன்று சூறாவளியுடன் மழை பெய்யும் என்று வானிலை இலாகா அறிவித்துள்ளது.
கடந்த இரு வாரமாக தமிழக மக்களை வறுத்தெடுத்து வந்த அக்னி நட்சத்திர கத்திரி வெயில் நாளையுடன் விடைபெறுகிறது.அக்னி நட்சத்திரம் தொடங்கிய கடந்த 4ம் தேதி தமிழ்நாடு முழுவதும் கன மழை பெய்தது. அதற்குப் பிறகு 3 வாரமாக வெயில்கொளுத்தியது.
இன்று மீனம்பாக்கத்தில் வெயிலின் அளவு 98.6 டிகிரியாகவும், நுங்கம்பாக்கத்தில் 100.4 டிகிரியாகவும் இருந்தது.
இந் நிலையில் வங்கக் கடலில் அந்தமான் தீவுகளுக்கு தெற்கே லேசான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. அதுதொடர்ந்து அங்கேயே மையம் கொண்டுள்ளது.
இதனால் இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு இரு"ப்பதாக சென்னைவானிலை மையம் அறிவித்துள்ளது.
Comments
Story first published: Friday, May 27, 2005, 5:30 [IST]