மேம்பால வழக்கை சட்டப்படி சந்திப்போம்: ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மேம்பால ஊழல் வழக்கை சட்டப்படி சந்திப்போம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், கடந்த 4 ஆண்டுகளாக மேம்பால ஊழல் வழக்கில் அரசு ஏன் அமைதியாக இருந்தது ஏன்என்று அறிய விரும்புகிறேன். இந்த வழக்கில் வேண்டுமென்றே பழி வாங்கும் நோக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

இது பொய் வழக்கு. எனவே சட்டப்படி நாங்கள் இந்த வழக்கை சந்திப்போம்.

மாநகராட்சியின் உயர் அதிகாரிகள் யாரும் இந்த வழக்கில் சாட்சி சொல்ல முன்வரவில்லை. இதனால் கீழ்நிலை அதிகாரிகளைசாட்சிகளாக சேர்க்க அரசு திட்டமிட்டுள்ளது.

வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த துணை மேயர் கராத்தே தியாகராஜனை நியமனக் குழு கூட்டத்திற்கு தலைமைவகிக்க அவசரம் அவசரமாகஅழைத்துள்ளனர். மாநகராட்சியின் 5 அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க இந்தக்கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி மன்ற நியமனக் குழுவுக்கு மாநகராட்சி ஊழியர்களின் சம்பளம் மற்றும் பதவி உயர்வு போன்றவை குறித்துமுடிவெடுக்க மட்டுமே அதிகாரம் உள்ளது என்றார் ஸ்டாலின்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+