அத்வானி மீது ஜனா. கிருஷ்ணமூர்த்தி கடும் தாக்கு
டெல்லி:
அத்வானி தேசிய தலைவர் அல்ல. வீணாய்ப் போன கட்சியின் தலைவர் பாஜகவின் முன்னாள் தலைவர் ஜனாகிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
ஆங்கில வாரப் பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் அத்வானியை அ.. போட்டுத் தாக்கு லெவலில்தாக்கியுள்ளார். அதன் விவரம்:ஆர்எஸ்எஸ்-பாஜக உறவு குறித்து சென்னையில் நடைபெற்ற தேசிய செயற்குழு கூட்டத்தில் அத்வானி கூறியகருத்துக்கள் தவறானவை. கட்சி விவகாரத்தில் சங் பரிவார் அமைப்புகள் தலையிடுவதில்லை.
அன்மைக் காலங்களில் கட்சி தனது கொள்கைகளையும், மதிப்புகளையும் தொலைத்து வருகிறது. கட்சியின்கொள்கைகளை விட்டு விலகியதால் தான் கடந்த மக்களவை தேர்தலில் பாஜக தோல்வியை தழுவியது.
ஒட்டு மொத்த தேசத்தின் நம்பிக்கையையும், மரியாதையும் பெற்றுள்ள தேசத்தலைவர் ஒருவர் கூட நம்மிடம்இல்லை. இந்த விஷயத்தில் விதிவிலக்காக இருப்பவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்.
ஆனால் அவரது உடல்நிலை கருதி அவரிடமிருந்து அதிகம் எதிர்பார்க்க முடியாது. கட்சியில் கூட்டு தலைமைஇல்லை என பிரமோத் மகஜன் கூறியிருப்பது முழுக்க முழுக்க உண்மை.
பாஜகவை ஆட்சியில் அமர்த்திய அடிமட்ட தொண்டர்களை கட்சி இப்போது ஓரம் கட்டி விட்டது என்றார் ஜனா.
கட்சியில் ஜனா இப்போது ஒரு ஒரமாய் உட்கார வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.