டால்மியாபுரம் சிமென்ட் ஆலை இடிந்து 12 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
டால்மியாபுரம் சிமென்ட் ஆலையின் கட்டடம் இடிந்ததில் 12 பேர் பலியானார்கள். ஏராளமானோர் படுகாயம்அடைந்தனர். பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து அறிந்த உடன் சம்பவ இடத்திற்கு தீயணைக்கும் படையினர் மற்றும் போலீஸார் விரைந்து சென்றுமீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதுவரை 12 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications