கோவை மண்டல திமுக மாநாடு தொடங்கியது
கோவை:
திமுகவின் கோவை மண்டல மாநாடு சனிக்கிழமை காலை நாகூர் அனிபாவின் இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
விருதுநகர், திண்டுக்கல், தஞ்சை ஆகிய மண்டல மாநாடுகளைத் தொடர்ந்து, கோவை மண்டல மாநாடு சனிக்கிழமைகோவையில் தொடங்கியது.
இதையடுத்து கோவை மாவட்ட திமுக செயலாளர் பொங்கலூர் பழனிச்சாமி வரவேற்றுப் பேசினாார். மாநாட்டை நெல்லைமாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் திறந்து வைத்தார்.
மாநாட்டில் திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் அன்பழகன், துணைப் பொதுச்செயலாளர் மு.க.ஸ்டாலின், ஆற்காடுவீராசாமி, துரைமுருகன் மற்றும் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உட்பட திரளான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
மாநாடு தொடங்கியதும் சுப்புலெட்சுமி ஜெகதீசன், கோவை ராமநாதன், காந்தி செல்வன், ராமச்சந்திரன், வீரகோபால் ஆகியோர்மாநாட்டு தலைவரை வழிமொழிந்து பேசினர். இதையடுத்து பல்வேறு தலைப்புகளில் தலைவர்கள் பேச்சைத் தொடங்கினர்.
மாலையில் மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், ராஜா, துணைப் பொதுச்செயலாளர் பரிதி இளம்வழுதி, சற்குண பாண்டியன்,திருச்சி சிவா, கோவை ராமநாதன் உள்ளிட்டோர் பேசுகின்றனர்.
இரவு 8.30 மணிக்கு முதன்மை செயலாளர் துரைமுருகன் உரையாற்றுகிறார். இதன் பிறகு அன்பழகன் உரையுடன் முதல் நாள்மாநாடு நிறைவடைகிறது.
முன்னதாக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவர் கருணாநிதி இன்று காலை சேரன் எக்ஸ்பிரஸ் மூலம் கோவைவந்தார். அவரை திமுக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
மாநாட்டுக்காக நீலாம்பூர் பைபாஸ் சாலையில் 160 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுத் திடல் அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா திடல்என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இடத்தில் 5 லட்சம் சதுர அடியில் பிரமாண்டமான பந்தல் போடப்பட்டுள்ளது.
பெரும் பொருட் செலவில் பந்தலும், மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. 1 லட்சம் பேர் வரை இங்கு அமர வசதிசெய்யப்பட்டுள்ளது. இது தவிர பெரியார், அண்ணா, கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின் ஆகியோரின் பிரமாண்டமானபடங்களும் டிஜிட்டல் விளம்பரமாக வைக்கப்பட்டுள்ளன.
நகர் முழுவதும் கருணாநிதியின் வயதைக் குறிக்கும் வகையில், 83 இடங்களில் வரவேற்பு வளைவுகளும் வைக்கப்பட்டுள்ளன. முக்கிய சாலைகளின் இருமருங்கிலும் திமுக கொடிகள் கட்டப்பட்டுள்ளன.