உதயமானது காரைக்கால் மாவட்டம்
பாண்டிச்சேரி:
புதுவை யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட காரைக்கால் பிராந்தியம் தனி மாவட்டமாக உதயமாகியுள்ளது.
புதுவை யூனியன் பிரதேசத்தின் கீழ் வரும் காரைக்கால் பகுதி, புதுவை அரசால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும்,மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் புதுவை அரசு காரைக்கால் பிராந்தியத்தை நடத்தி வருவதாகவும் சமீப காலமாக குற்றச்சாட்டுஅதிகரித்த வந்தது.
இந்த நிலையில் காரைக்கால் பகுதிக்கென சில சிறப்புத் திட்டங்களைமாநிலமுதல்வர் ரங்கசாமி அறிவித்தார். அதன்படி,காரைக்கால் தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என ரங்கசாமி தெரிவித்திருந்தார்.
அதற்கு முதல்கட்டமாக காரைக்காலை தனி வருவாய் மாவட்டமாக சமீபத்தில் புதுவை அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்துதற்போது காரைக்கால் நிர்வாக மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தின் முதல் ஆட்சித் தலைவராக டாக்டர்சுந்தரவடிவேலு நியமிக்கப்பட்டுள்ளார்.
சுந்தரவடிவேலு,ஏற்கனவே காரைக்கால் பிராந்திய நிர்வாகியாகப்பொறுப்பு வகித்து வந்தார். பிரெஞ்சு காலனி ஆதிக்கத்தின் கீழ்இருந்த புதுவை, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகள் இணைந்துதான் புதுவை யூனியன் பிரதேசமாகஅறிவிக்கப்பட்டது. இருப்பினும் புதுவையைச் சேர்ந்தவர்களுக்குத்தான் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் புதுவை அரசுமுக்கியத்துவம் தருவதாக மற்ற பகுதிகளில் நீண்ட காலமாகவே முனுமுனுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.